Friday, August 1, 2014

யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; விரைவில் முடிவு என அரசு பதில்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகளில் திறனறி தேர்வு (சி.எஸ்.ஏ.டி.) ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24–ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஆங்கில புலமை குறைந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் கண்டன போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் சி.எஸ்.ஏ.டி. தேர்வை ஒத்தி வைக்குமாறு, யு.பி.எஸ்.சி.யை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மேலும் இது தொடர்பாக குழு ஒன்றை அமைத்த மத்திய அரசு, இந்த தேர்வில் மொழி அடிப்படையில் எந்த பாகுபாடும் கிடையாது என்றும் அறிவித்தது.


No comments:

Post a Comment