Friday, August 29, 2014

ஒரு ஆபாச இணையதளத்தை பிளாக் செய்தால், மற்றொன்று தொடங்குகிறது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்பான ஆபாச இணையதளங்களை முடக்க கோரி கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, இது போன்ற ஆபாச இணையதளங்களின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளது. இதனால் கட்டுப்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளது. இத்தகைய பிரச்சனைகளை தீர்க்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளது. இதனையடுத்து, பிரச்சனை தொடர்பாக் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் அறிக்கையை 6 வார காலங்களில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment