Sunday, August 31, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 107 சதவிகிதமாக உயர்த்த அரசு திட்டம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஜூலை 1ம் தேதி முதல் 2014 ஜூன் 30ம் தேதி வரையில் தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.


No comments:

Post a Comment