Thursday, August 28, 2014

நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. இத்திட்டத்தை இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்றே இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி; நிதி தீண்டாமையை அகற்றவே அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பேசினார்.


No comments:

Post a Comment