Saturday, August 30, 2014

பஸ் மீது டிராக்டர் மோதி விபத்து 10 பக்தர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் போக்ரான் அருகே உள்ள பாபா ராம்தேவ் சன்னதிக்கு, உதைபூரை சேர்ந்த பக்தர்கள் பஸ்சில் வந்துள்ளனர். அவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு, தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்களது பஸ், பாலி- உதைபூர் சாலையில் காலை 6 மணிக்கு மணிடா கிராமத்தை கடந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர் பஸ் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 6 பக்தர்கள் சம்பவ இடத்திலே பலியாகினர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும், வழியிலே காயம் அடைந்த 4 பேர் பலியாகினர். மேலும், காயம் அடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடத்ததை அடுத்து டிராக்டர் ஓட்டி வந்தவரை காணவில்லை.


No comments:

Post a Comment