இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இதனை மீறி இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 25–ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது.
No comments:
Post a Comment