Thursday, July 31, 2014

என் சுயசரிதை வெளியாகும் போது நட்வர் சிங் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்படும் - சோனியா காந்தி

மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது ஐந்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங். உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால், இவர் பதவி விலக வேண்டியதாகி விட்டது. அப்போதிருந்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி இருக்கிறார். தனது அரசியல் அனுபவங்களை அவர் ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி உள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு பிரதமர் பதவியை சோனியா காந்தி ஏற்க மறுத்தது ஏன் என்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.


No comments:

Post a Comment