தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் சுரங்கப்பாதை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் அமைத்திருக்கக்கூடும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினர் முழுமையாக சோதனை நடத்தினர். ஆனால், அங்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதால், அப்பணி மிகவும் மெதுவாக நடந்தது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு ராணுவத்தை தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment