Wednesday, March 25, 2015

நிலக்கரி ஊழல்; சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மன்மோகன் சிங் சுப்ரீம் கோர்ட்டு சென்றார்

நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மன்மோகன் சிங் சுப்ரீம் கோர்ட்டு சென்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரூ.1.86 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது. அந்த வரிசையில், ஒடிசா மாநிலத்தில் தலபிரா 2–வது நிலக்கரி சுரங்கத்தை, தேர்வுக்குழு நிராகரிப்புக்கு பின்னும் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால் கோவுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Read more at http://ift.tt/1LX0Gkf

No comments:

Post a Comment