Sunday, March 29, 2015

காஷ்மீரில் கனமழை: அபாய கட்டத்தை தாண்டி ஜீலம் ஆறு பாய்கிறது

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


No comments:

Post a Comment