Monday, October 27, 2014

பெண்ணுக்கு தொல்லை பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் கைது

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்தவர் காஜூலா வெங்கையா நாயுடு. இவர் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான் யுவ மோர்ச்சாவின் தலைவராக உள்ளார். காஜூலா வெங்கையா நாயுடு தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயுடு பெண்ணுக்கு தவறான மெயில், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தெனாலியில் கைது செய்யப்பட்ட நாயுடு ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.


No comments:

Post a Comment