Friday, October 31, 2014

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆலோசகர் நியமனம்

கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆலோசகராக இந்திய வருவாய் பணியின் மூத்த அதிகாரி கே.வி.சவுத்ரியை மத்திய அரசு நியமித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ், நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும் 11 உறுப்பினர்களையும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது.


No comments:

Post a Comment