Wednesday, December 24, 2014

கோட்சே படத்திற்கு எதிரான வழக்கு புனே கோர்ட்டு விசாரணைக்கு ஏற்பு

'தேசபக்தர் நாதுராம் கோட்சே' திரைப்படத்தை வருகிற ஜனவரி 30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்து மகாசபையின் தலைவர் முன்னாகுமார் சர்மா சமீபத்தில் படம் குறித்து பேசுகையில், மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, தேச பக்தர் என்றும், மகாத்மா காந்தி இந்துக்களுக்கு எதிரானவர் என்பது குறித்தும் காட்டும் படம் என்று கூறியதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு சமுக ஆர்வலர் கேமந்த் பாட்டீல் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிவில் கோர்ட்டு நீதிபதி எஸ்.எஸ். நாயர் நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment