அசாம் மாநிலத்தில் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் ஆதிவாசிகள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் போடோ தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம், போடோ தீவிரவாதிகள் அதி நவீன துப்பாக்கிகளுடன் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் மாவட்டங்களில் உள்ள சோனாஜூலி, விஸ்வநாத் சரியாலி, உல்தாபாணி, மதுபூர் ஹதிஜூலி, ருமிகாதா ஆகிய 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
Read more at http://ift.tt/1wmDkX9
Read more at http://ift.tt/1wmDkX9
No comments:
Post a Comment