ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்-கண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் கிராமத்தை சுற்றி வளைத்தது. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள அவர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவமும், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
http://ift.tt/1CZobRX
http://ift.tt/1CZobRX
No comments:
Post a Comment