Tuesday, November 25, 2014

ஜார்கண்டில் 13 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது

81 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்கட்டமாக இன்று 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 199 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 33 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர். இதற்காக 3,939 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்தல் நடைபெறும் 13 தொகுதிகளில், 7 தொகுதிகள் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றே அனைத்து வாக்குசாவடிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன.

Read more at http://ift.tt/1yPNu5V

No comments:

Post a Comment