வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாராளுமன்றம் தொடங்கியதும் கருப்பு நிற குடைகள் வைத்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வாருங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம, ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர். எப்போது கருப்பு பணம் இந்தியாவிற்கு திரும்பி கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
http://ift.tt/1AM0hur
http://ift.tt/1AM0hur
No comments:
Post a Comment