Friday, November 28, 2014

அர்னியாவில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லையில் அர்னியா செக்டாரில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவமும், அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. "அர்னியா சப்-செக்டாரில் பிதால் எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்," என்று எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும், எல்லை பாதுகாப்புப் படை துருப்புக்கள் அமைதியை கடைபிடித்தனர் என்றும் ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்படவில்லை என்றும் சேதம் குறித்தான தகவல்கள் இல்லை என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1zCRFlK

No comments:

Post a Comment