சாரதா சிட்பண்ட் மோசடி சம்பவத்தை எதிர்கொள்ளும், திரிணாமுல் காங்கிரஸ் தலைமை, பாராளுமன்றத்தில் கருப்பு பணம் விவகாரத்தை எழுப்புவோம் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி இன்று பாராளுமன்றம் நுழைவு வாயிலில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கருப்பு நிற கூடையில் வாசங்களை எழுதி போராட்டம் நடத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
http://ift.tt/1xxb1qj
http://ift.tt/1xxb1qj
No comments:
Post a Comment